தமிழ்நாடு

நடிகர் ரஜினி மீது வழக்குப்பதிய கோரிய மனு - வழக்கின் தீர்ப்பு நாளை ஒத்திவைப்பு

பெரியார் குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பாக ரஜினி மீதான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது.

தந்தி டிவி

கடந்த ஜனவரி மாதம் துக்ளக் விழாவில் பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக, ரஜினி மீது திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால், சென்னை எழும்பூர் 2-வது குற்றவியல் நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டது. அதில், பொய்யான தகவலை கூறி இருபிரிவினர் இடையே பகையை ஏற்படுத்தும் விதமாக பேசியதாக, ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு காவல் ஆணையர், ஆய்வாளர் ஆகியோருக்கு உத்தரவிட கோரிக்கை விடுக்கப்பட்டது. வழக்கில், இன்று தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி தெரிவித்த நிலையில், ரஜினிக்கு ஆதரவாக ஆறுமுகம் என்பவர் குறுக்கீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ரஜினிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்யுமாறு வாதிடப்பட்டது. இதையடுத்து, ரஜினி மீதான வழக்கின் தீர்ப்பு நாளை வழங்குவதாக, ஒத்திவைத்தார்.

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி