தமிழ்நாடு

ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சையாக பேசியதாக வழக்கு - இயக்குநர் ரஞ்சித்துக்கு நிபந்தனை ஜாமீன் அளித்த நீதிமன்றம்

பொதுக்கூட்டத்தில் ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சையாக பேசியதாக இயக்குநர் ரஞ்சித் மீது போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

தந்தி டிவி

நீதிமன்ற உத்தரவுபடி திரைப்பட இயக்குநர் ரஞ்சித், 2 வது நாளாக திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். தஞ்சை மாவட்டம், திருப்பனந்தாளில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சையாக பேசியதாக இயக்குநர் ரஞ்சித் மீது போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் நிபந்தனை ஜாமீன் அளித்த கும்பகோணம் நீதிமன்றம், திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் 3 நாட்கள் நேரில் ஆஜராகி கையெழுத்திட உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று கையெழுத்திட்ட ரஞ்சித், இன்று இரண்டாவது நாளாக நேரில் ஆஜராகி கையெழுத்திட்டார். அவருடன் நீலப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் 50க்கும் மேற்பட்டோர் வந்ததால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு