தமிழ்நாடு

ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சையாக பேசியதாக வழக்கு - இயக்குநர் ரஞ்சித்துக்கு நிபந்தனை ஜாமீன் அளித்த நீதிமன்றம்

பொதுக்கூட்டத்தில் ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சையாக பேசியதாக இயக்குநர் ரஞ்சித் மீது போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

தந்தி டிவி

நீதிமன்ற உத்தரவுபடி திரைப்பட இயக்குநர் ரஞ்சித், 2 வது நாளாக திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். தஞ்சை மாவட்டம், திருப்பனந்தாளில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சையாக பேசியதாக இயக்குநர் ரஞ்சித் மீது போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் நிபந்தனை ஜாமீன் அளித்த கும்பகோணம் நீதிமன்றம், திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் 3 நாட்கள் நேரில் ஆஜராகி கையெழுத்திட உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று கையெழுத்திட்ட ரஞ்சித், இன்று இரண்டாவது நாளாக நேரில் ஆஜராகி கையெழுத்திட்டார். அவருடன் நீலப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் 50க்கும் மேற்பட்டோர் வந்ததால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு