தமிழ்நாடு

ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சையாக பேசியதாக வழக்கு - இயக்குநர் ரஞ்சித்துக்கு நிபந்தனை ஜாமீன் அளித்த நீதிமன்றம்

பொதுக்கூட்டத்தில் ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சையாக பேசியதாக இயக்குநர் ரஞ்சித் மீது போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

தந்தி டிவி

நீதிமன்ற உத்தரவுபடி திரைப்பட இயக்குநர் ரஞ்சித், 2 வது நாளாக திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். தஞ்சை மாவட்டம், திருப்பனந்தாளில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சையாக பேசியதாக இயக்குநர் ரஞ்சித் மீது போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் நிபந்தனை ஜாமீன் அளித்த கும்பகோணம் நீதிமன்றம், திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் 3 நாட்கள் நேரில் ஆஜராகி கையெழுத்திட உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று கையெழுத்திட்ட ரஞ்சித், இன்று இரண்டாவது நாளாக நேரில் ஆஜராகி கையெழுத்திட்டார். அவருடன் நீலப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் 50க்கும் மேற்பட்டோர் வந்ததால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்