தமிழ்நாடு

தமிழகத்தில் அடுத்த மூன்று தினங்களுக்கு மழையின் தீவிரம் இருக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் அடுத்த மூன்று தினங்களுக்கு மழையின் தீவிரம் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
தெற்கு தீபகற்ப பகுதியில் நிலவும் காற்று மண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யும் என அறிவித்துள்ளது. குறிப்பாக திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர்,நாகை, புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை ஆகிய 13 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழையை எதிர்பார்க்கலாம் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்து வரை வானம் மேகமூட்டத்துடனும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்