தமிழ்நாடு

கேட் கீப்பர் என்னை தாக்கினார் - அதிமுக எம்.பி போலீசில் புகார்

கேட் கீப்பர் மணிமாறன் தன்னை தாக்கியதாக கூறி அதிமுக எம்.பி. உதயக்குமார், அம்மையநாயக்கனூர் போலீசில் புகார்.

தந்தி டிவி

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே திருச்செந்தூரிலிருந்து பாலக்காட்டிற்கு பாசஞ்சர் ரயில் சென்று கொண்டிருந்தது. இதையடுத்து கொடைரோடு-அம்பாத்துரை இடையே அழகம்பட்டி ரயில்வே கேட்டை, கேட் கீப்பர் மணிமாறன் மூடியுள்ளார். இதனால் அந்த சாலையில் காத்திருந்த திண்டுக்கல் அதிமுக எம்.பி. உதயகுமார், தனது கார் வரும் போது எப்படி கேட்டை மூடலாம் எனக்கூறி, கேட் கீப்பரை தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து ரயில்வே ஊழியர்கள் ரயில்வே கேட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. பின்னர், இரவு ஏழரை மணியளவில் மதுரையில் இருந்து பாசஞ்சர் ரயில் வந்த போது கேட்டை மூடாமல், கேட் கீப்பர் தர்ணாவில் ஈடுபட்டார். இதனால், அந்த ரயில் சிறிதுநேரம் நிறுத்தப்பட்டது. பேச்சுவார்த்தைக்கு பிறகு கேட்டை மூடப்பட்டதால், ரயில் மீண்டும் புறப்பட்டது. இது குறித்து கேட் கீப்பர் மணிமாறன், கொடை ரோடு ரயில்வே போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதனிடையே, கேட் கீப்பர் மணிமாறன் தன்னை தாக்கியதாக கூறி அதிமுக எம்.பி. உதயக்குமார், அம்மையநாயக்கனூர் போலீசில் புகார் செய்துவிட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்