தமிழ்நாடு

பழனியில் இருந்து சென்னை மற்றும் தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்களை விட வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

பழனியில் இருந்து சென்னை மற்றும் தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்களை விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தந்தி டிவி

பழனியில் இருந்து சென்னை மற்றும் தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்களை விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பழனியில் செயல்பட்டு வந்த மீட்டர்கேஜ் ரயில் பாதை, அகலப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.இந்நிலையில் பழனி மார்க்கமாக குறைந்த அளவிலான ரயில்களே இயக்கப்படுவதால் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளாகியுள்ளதாக, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். பழனிக்கு 4 ரயில்களே விடப்படுவதால், பழனியில் இருந்து திருச்சி வழியாக சென்னைக்கு ஒரு ரயிலும், கோவையில் இருந்து பழனி வழியாக தென் மாவட்டங்களுக்கு சில ரயில்களும் இயக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"