தமிழ்நாடு

திருச்சி விமான நிலையத்தில் விடிய விடிய சோதனை

திருச்சி விமான நிலையத்தில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 30 கிலோ தங்கம் உள்ளிட்ட கடத்தல் பொருட்கள் பிடிபட்டன.

தந்தி டிவி

திருச்சி விமான நிலையத்திற்கு வந்த விமானங்களில் அதிகளவு தங்கம் கடத்தப்பட்டு வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து 22 பேர் கொண்ட குழுவினர் திருச்சி விமான நிலையத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது துபாய், சார்ஜா, மலேசியா, சிங்கப்பூரிலிருந்து வந்த விமானங்களில் பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். 130 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில் 30 கிலோ கடத்தல் தங்கம், ஐ- போன்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் தெரிவித்துள்ளனர்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு