புழல் சிறையில் கைதி திடீர் மரணம் - கதறி கொண்டே கர்ப்பிணி தங்கை சொன்ன திடுக் தகவல்
சென்னை கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் எனக் கூறப்படும் நிலையில், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவர் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டதாகவும், அதனால் உயிரிழந்திருக்கலாம் எனவும் தாய் மற்றும் தங்கை குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், அதுவரை உடலைப் பெறப்போவதில்லை என்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.