தமிழ்நாடு

ஒவ்வொரு சொட்டு நீரின் அவசியத்தை பொட்டில் அடித்து சொல்லும் காட்சிகள்

தந்தி டிவி

புதுக்கோட்டை அருகே ஆற்றை தோண்டி குடிதண்ணீரை எடுத்து வரும், அவலநிலை ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் சிறுகாசாவயல் கிராமத்தில், கடந்த ஓராண்டிற்கு முன்பு ஊராட்சி சார்பில் 2 குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வந்தாகவும், தற்போது 2 மாத காலமாக தண்ணீர் வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று, வெள்ளாற்றில் ஊற்று தோண்டி குடிநீரை எடுத்து, குடங்களில் ஏந்தி வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மழைக்காலங்களில் ஊற்றுநீரை எடுக்க முடியாமல் சிரமப்படுவதாக தெரிவித்த கிராம மக்கள், தூய்மையான குடிநீர் தடையின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு