தமிழ்நாடு

Pudukottai Murder| கந்தல் கோலமாக வெட்டி கூறு போடப்பட்ட 19 வயது இளைஞர்

thanthitv

புதுக்கோட்டை மாவட்டம் சந்தப்பேட்டை அருகே தினேஷ் என்ற 19 வயது இளைஞர் பயங்கர ஆயுதங்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்லப்பட்ட தினேஷ் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருக்கும் இவரது நண்பர்கள் மூன்று பேருக்கும் இடையே, பழைய இரும்புப் பொருட்களை விற்ற பணத்தைப் பிரிப்பதில் சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தினேஷ் அவர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நண்பர்கள் மூவரும், நேற்று தினேஷைச் சந்தப்பேட்டை பகுதிக்கு வரவழைத்துக் கொடூரமாக வெட்டிக் கொன்றனர். தகவலறிந்து வந்த நகர காவல் துறையினர், தினேஷின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். இக்கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தப்பியோடிய 3 நண்பர்களையும் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||சதுரகிரியில் பெரும் சோகம்... சாமியை பார்த்துவிட்டு இறங்கியபோது நடக்க கூடாத விபரீதம்

EV Charging Station | TN Govt |"20,000 EV பொது சார்ஜிங் நிலையங்கள்.." - தமிழ்நாடு அரசு அதிரடி முடிவு

TN Heat | 26 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு புரட்டியெடுத்த வெயில் - தமிழ்நாட்டிலேயே ஹாட் ஸ்பாட் இதுதான்

Election Commission | குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்யும் அரசியல் கட்சிகள் அதிரடி

"பாக்கெட்களுக்கு பதிலாக.."