தமிழ்நாடு

அசைவ உணவை தொடாத கிராமம் - ஆடு கோழிகளையும் வளர்க்காத விநோதம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வாடிமனைப்பட்டி என்ற கிராமத்தில், ஒருவர் கூட அசைவ உணவுகள் உண்ணாமல் வாழ்ந்து வருகின்றனர்.

தந்தி டிவி

* வாடிமனைப்பட்டி கிராம மக்கள் அனைவரும் வள்ளலாரின் சன்மார்க்க நெறியை பின்பற்றுகின்றனர். எனவே வள்ளலாரின் கொள்கைப்படி, கிராம‌ம் முழுவதும் ஒருவர் கூட அசைவ உணவுகளை சாப்பிடுவதில்லை.

* வெளியூருக்கு உறவினர் வீடுகளுக்கு சென்றால் கூட சைவ உணவுகளை மட்டுமே உண்ணுவதாக கூறுகின்றனர்.

* திருமணத்திற்கு பிறகு கிராமத்தில் குடியேறும் பெண்களும் சைவமாக மாற்றப்படுகின்றனர். அதே போல, ஆடு கோழிகளை வளர்த்து விற்றால், அவை பலி கொடுக்கவோ, அல்லது இறைச்சிகளுக்கோ தான் பயன்படுகிறது என்பதால் இங்கு ஆடுகளோ கோழிகளோ வளர்ப்பதில்லை.

* கண்மாயில் ஏராளமாக மீன்கள் வளர்கின்றன. ஆனால், இந்த கிராம மக்கள் மீன்கள் பிடிப்பதில்லை. சைவ உணவுகளை மட்டுமே உண்பதால், ஆரோக்கியமாகவும், அதிக ஆயுள் வாழ்வதாகவும், கிராம மக்கள் கூறுகின்றனர்.

* புது புது அசைவ உணவுகளை நோக்கி மனிதனின் தேடல் தொடர்ந்து கொண்டிருக்கும் இன்றைய கால கட்டத்தில், வாடிமனப்பட்டி கிராம‌மே சைவமாக மாறி நிற்பது அருகே உள்ள கிராம மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்