தமிழ்நாடு

புதுக்கோட்டை : மயில்களை வேட்டையாடிய 3 பேர் கைது

புதுக்கோட்டை அருகே மயில்களை வேட்டையாடிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி மற்றும் மூன்று மயில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தந்தி டிவி

புதுக்கோட்டை அருகே மயில்களை வேட்டையாடிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி மற்றும் மூன்று மயில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த அன்னவாசல் போலீசார், கார் ஒன்றை சோதனை செய்த போது, அதில் 3 மயில்கள் மற்றும் நாட்டுத் துப்பாக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் பொன்னமராவதி பகுதியை சேர்ந்த பெருமாள், மூர்த்தி மற்றும் ஆறுமுகம் என்பதும், வனப்பகுதியில் அவர்கள் மயில்களை வேட்டையாடியதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை வனத்துறையிடம் ஒப்படைத்தனர். 3 பேருக்கும் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக, மாவட்ட வன உதவி அலுவலர் சங்கர் தெரிவித்துள்ளார்.

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி