தமிழ்நாடு

புதுக்கோட்டை : மயில்களை வேட்டையாடிய 3 பேர் கைது

புதுக்கோட்டை அருகே மயில்களை வேட்டையாடிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி மற்றும் மூன்று மயில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தந்தி டிவி

புதுக்கோட்டை அருகே மயில்களை வேட்டையாடிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி மற்றும் மூன்று மயில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த அன்னவாசல் போலீசார், கார் ஒன்றை சோதனை செய்த போது, அதில் 3 மயில்கள் மற்றும் நாட்டுத் துப்பாக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் பொன்னமராவதி பகுதியை சேர்ந்த பெருமாள், மூர்த்தி மற்றும் ஆறுமுகம் என்பதும், வனப்பகுதியில் அவர்கள் மயில்களை வேட்டையாடியதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை வனத்துறையிடம் ஒப்படைத்தனர். 3 பேருக்கும் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக, மாவட்ட வன உதவி அலுவலர் சங்கர் தெரிவித்துள்ளார்.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு