தமிழ்நாடு

நாசாவுக்கு செல்ல அரசுப் பள்ளி மாணவி தேர்வு : மாணவிக்கு குவிந்த உதவித் தொகை

அமெரிக்க விண்வெளி நிறுவனமான 'நாசாவை சுற்று பார்க்க புதுக்கோட்டையை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவி ஒருவர் தேர்வாகியுள்ளார்.

தந்தி டிவி

புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஜெயலட்சுமி. இந்த மாணவி தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று நடத்திய விண்வெ ளி குறித்த ஆன்லைன் தேர்வில் கலந்து கொண்டார். இதில் அவர் இரண்டாம் இடத்தை பிடித்து தேர்வாகி உள்ளார். இதனைத்தொடர்ந்து அந்த தனியார் தொண்டு நிறுவனம் அவரை விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா விற்கு அழைத்துச் செல்ல உள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனால் அமெரிக்காவுக்கு செல்ல மாணவியிடம் பணம் இல்லை என்று தகவல் வெளியானதை அடுத்து பல்வேறு அமைப்பினர் சார்பில் அவருக்கு நன்கொடைகளை அளித்து வருகின்றனர். குறிப்பாக ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் 67 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி முன்னிலையில் அந்த மாணவியிடம் அந்த நிறுவனம் ஒப்படைத்தது.

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு

Kaveri | Karnataka | தண்ணீர் திறந்துவிடும் சமயத்தில்..போர்க்கொடி தூக்கிய பாஜக..பரபரக்கும் கர்நாடகா