தமிழ்நாடு

ஒவ்வொரு மழைத்துளியையும் வீணாக்காத விவசாயி - கிணற்றில் மழை நீரை சேமித்து தானம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மழை நீரை கிணற்றில் சேமித்து, மக்கள் பயன்பாட்டிற்கு விவசாயி ஒருவர் அளித்து வருகிறார்.

தந்தி டிவி

கொத்தமங்கலத்தை சேர்ந்த விவசாயி வீரமணி, கடந்த ஆறு மாதங்களாக வீட்டில் விழும் ஒவ்வொரு மழைத் துளியும் வீணடிக்காமல் தனது தோட்டத்தில் உள்ள பழைய கிணற்றை தோன்றி மழைநீர்த் தொட்டியை உருவாக்கியுள்ளார். வீட்டில் விழும் மழை நீரை குழாய்கள் பொருத்தி அதன் வழியாக சல்லடை அமைத்து சுத்தம் செய்து தண்ணீர் கிணற்றில் விழுகிறது. கொத்தமங்கலம் பகுதியில் போர்களில் தண்ணீர் அளவு ஆயிரம் அடிக்கு கீழ் சென்றதால், மக்கள் தண்ணீருக்கு தவிக்கும் நிலையில், தற்போது விவசாயி வீரமணி கிணற்றில் உள்ள தண்ணீரை 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிநீராக பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?