தமிழ்நாடு

சிறுமியை கொலை செய்து கைதான இளைஞர் தப்பி ஓட்டம் - தப்பியவரை தேடும் பணியில் போலீசார் தீவிரம்

புதுக்கோட்டை அருகே சிறுமியை பாலியல் வன்முறை செய்து கைதான இளைஞர் போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தந்தி டிவி

புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் 7 வயது சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த ராஜா என்ற இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக போலீசார் குற்றவாளி ராஜாவை வாகனத்தில் அழைத்து வந்தனர். அப்போது மருத்துவமனையில் போலீசாரின் பிடியில் இருந்த ராஜா, திடீரென தப்பி ஓடினார். இதையடுத்து அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அவர் தப்பி ஓடிய வனப்பகுதியில் ஏராளமான போலீசார் முகாமிட்டு அவரை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மூன்று ட்ரோன் கேமராக்கள் மூலம் தப்பிய இளைஞர் ராஜாவை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இதனிடையே, தப்பி ஓடிய கைதியை கண்டுபிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதால் விரைவில் கைதி கைது செய்யப்படுவார் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு