புதுச்சேரியில், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை, அதிகாரிகள் காவல்துறை உதவியுடன் அகற்றினர். நோட்டீஸ் வழங்கியும் கடைகளை அகற்றாததால், அதிகாரிகள் இந்த நடவடிக்கையில் இறங்கினர். அப்போது பெண் வியாபாரி ஒருவர், தான் வைத்திருந்த கடையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.