தமிழ்நாடு

"ஞாபகம் வருதே ஞாபகம் வருதே.." - நினைவுகளை நினைத்து நெகிழ்ந்த புதுச்சேரி CM

தந்தி டிவி

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி முதன் முதலில் வாங்கிய

அம்பாசிடர் காரினை புதுப்பித்து அதில் அமர்ந்து ரசித்துள்ளார்.

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி 1991இல் தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து 33 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். இருசக்கர வாகனத்தில்

அதிகம் செல்வதை வழக்கமாக கொண்டுள்ள ரங்கசாமி தனது யமஹா ஆர்.எக்ஸ் 100 பைக்கில் சென்று நாடாளுமன்ற தேர்ததில் வாக்களித்தார். 1997இல் முதன் முறையாக அவர் வாங்கிய அம்பாசிடர் கார் பழுதடைந்து மிக மோசமான நிலையில் இருந்த நிலையில், அதை சீர் செய்ய தூத்துக்குடியில் உள்ள ஒரு பணி மணிக்கு அனுப்பி வைத்தார். தற்போது அந்த அம்பாசடர் கார் சீர் செய்யப்பட்டு புது பொலிவுடன், முதலமைச்சர் இல்லத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளது. அப்போது அதனை கண்ட முதலமைச்சர் ரங்கசாமி ஆசையுடன் அதில் அமர்ந்து ரசித்தார். இனி

புதுப்பிக்கப்பட்ட இந்த காரில் அவர் உள்ளூரில் பயணிக்க உள்ளதாக கூறப்படுகிறது

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை