தமிழ்நாடு

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே முறையாக குடிநீர் வழங்கவில்லை என்று கூறி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்

தந்தி டிவி

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே முறையாக குடிநீர் வழங்கவில்லை என்று கூறி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். பி.என்.பட்டி பேரூராட்சியைக் கண்டித்து, தங்கமபுரி பட்டினத்தில் மறியலில் ஈடுபட்ட பெரியார் நகரை சேர்ந்த பெண்கள், பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினர். இந்த மறியல் காரணமாக சேலம்-மேட்டூர் சாலையில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.தகவல் அறிந்து வந்த கருமலைக் கூடல் போலீசார் நடத்திய சமாதான பேச்சுவார்த்தைக்கு பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி