தமிழ்நாடு

"பொது வாழ்க்கையில் வெளிப்படைத்தன்மை வேண்டும்" - ஆளுநர் பன்வாரிலால்

தனி மனித வாழ்க்கையில் மட்டுமில்லாமல், பொது வாழ்க்கையிலும் வெளிப்படை தன்மையோடு இருக்க வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
சென்னை மியூசிக் அகாடமியில் ஸ்ரீ சனாதனா தர்மா வித்யாலயா பள்ளியின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், வாழ்க்கையில் எளிமையாக இருக்க வேண்டும் என்றார். எளிமையாக இருந்தால் தான் வாழ்க்கையின் உச்சத்திற்கு செல்லலாம் என்றும் அவர் கூறினார். அநியாயம் நடந்தால் தட்டிக் கேட்பது என்பது மனித தன்மை என்று கூறிய ஆளுநர், ஆனால் இன்றைய காலத்தில் நம் கண் முன்னே நடக்கும் அநியாயத்தை தட்டிக் கேட்காமல் கடந்து செல்வதாக குறிபிட்டார். நம்மிடையே மனித தன்மை குறைந்து வருவதாகவும் பன்வாரிலால் புரோஹித் கூறினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்