தமிழ்நாடு

சாலையோர முதியவர்களை கொல்லும் சைக்கோ - தனிப்படை அமைத்து தீவிர விசாரணை

இரவு நேரத்தில் சாலையோரம் தூங்கி கொண்டிருக்கும் முதியவர்களை கொலை செய்யும், சைக்கோ கொலையாளி குறித்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

சேலம் நகரில், இரவு நேரங்களில், சாலையோரம் உறங்குபவர்கள் கொலை செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

கடந்த 2 நாட்களில், தொடர்ச்சியாக இரண்டு பேர் கொலை செய்யப்பட்டதால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்தநிலையில் நேற்று காசகாரனூர் தேசிய நெடுஞ்சாலையில் கடை வாசலில் தூங்கிய, முதியவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த காட்சிகளை வைத்து போலீசார் தங்கள் விசாரணையை துவங்கியுள்ளனர். சைக்கோ கொலையாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு