தமிழ்நாடு

நீட் தேர்வை எதிர்த்து போராட்டம் - நாம் தமிழர் கட்சியினரால் பரபரப்பு

மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நாம் தமிழர் கட்சியினர் மற்றும் மக்கள் பாதை இயக்கத்தினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நாம் தமிழர் கட்சியினர் மற்றும் மக்கள் பாதை இயக்கத்தினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மருத்துவ கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டம் நடத்த உரிய அனுமதி பெறாத நிலையில் போலீசார் போராட்டக்காரர்களை கைது செய்தனர். மேலும் கலெக்டர் அலுவலகம் முன் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே