தமிழ்நாடு

4,001 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு

4 ஆயிரத்து 1 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு செய்யப்படுவர் என்றும், ஜக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க முடியாது எனவும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

தந்தி டிவி

4 ஆயிரத்து 1 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு செய்யப்படுவர் என்றும், ஜக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க முடியாது எனவும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் ராதாகிருஷ்ணன் இது தொடர்பாக ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் "பாட வாரியாக 4 ஆயிரத்து 1 பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களில் ஆயிரத்து 500 க்கும் அதிகமான ஆசிரியர்களுக்கு 17-பி பிரிவின் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டு, நடவடிக்கை நிலுவையில் இருப்பதால், அவர்கள் அனைவருக்கும் பதவி உயர்வு கிடையாது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்