தனியார் நிதி நிறுவனம் மூலம் பள்ளி மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கும் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தங்கள் மாணவர்களுக்கான கல்விக் கட்டணங்களை ஒட்டுமொத்தமாக மும்பையைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவனம் செலுத்தும் வகையிலும், அந்த கல்விக் கட்டணங்களை மாத தவணையில் பெற்றோர்கள் செலுத்தலாம் என்றும் தனியார் பள்ளிகள் சங்கம் தெரிவித்தது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், இது குழந்தைகளை அடமானம் வைக்கும் செயலாகவும், கந்துவட்டி போல பெற்றோர்களிடம் பல மடங்கு வட்டி வசூலிக்கும் செயலாகவும், அமைந்துள்ளதாக தெரிவித்தார்.