தமிழ்நாடு

தனியார் மருத்துவமனையின் பகீர் செயல்.. கொந்தளித்த மக்கள்.. ஓசூரில் பரபரப்பு

தந்தி டிவி

ஓசூர் ராயக்கோட்டை அட்கோ பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் இருந்து, குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதையறிந்த அப்பகுதி மக்கள், தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு, அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனையின் கழிவுநீரால், பொதுமக்கள் நோய்த்தொற்றுக்கு ஆளவதாக அவர்கள் குற்றம்சாட்டினர். தகவல் அறிந்து வந்த ஓசூர் போலீசார், இரு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தனியார் மருத்துவமனையில் இருந்து குடியிருப்பு பகுதிக்குள் கழிவு நீர் திறந்து விடப்படுவதை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்