தமிழ்நாடு

தனியார் பால் நிறுவன மேலாளர் தற்கொலை - காவல் துறை விளக்கம்

தந்தி டிவி

சென்னை ரெட்டேரியில் உள்ள தனியார் பால் நிறுவன மேலாளர் தற்கொலை விவகாரத்தில் காவல் துறையின் தலையீடு எதுவும் இல்லை என்று சென்னை காவல் துறை விளக்கம் அளித்துள்ளது. பால் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்த நவீன் 40 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, நிறுவனத்தின் அதிகாரிகள், கொளத்தூர் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, அவர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சென்னை காவல் துறை, இந்த புகார் தொடர்பாக மத்திய குற்றப் பிரிவில் நவீனை அழைத்து போலீசார் விசாரணை செய்யவில்லை என்று தெரிவித்துள்ளது. பால் நிறுவனத்திற்கு நவீன் அனுப்பிய

மின்னஞ்சலில் காவல் துறையினரை பற்றி எவ்வித குற்றச்சாட்டையும் தெரிவிக்கவில்லை என்றும், ஆனால், சமூக வலைதளங்களில் சிலர் கொளத்தூர் காவல் துணை ஆணையாளரை தொடர்புபடுத்தி பதிவிட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்