தமிழ்நாடு

சிறை விதிமுறை மீறி கைதிகள் போராட்டம் - 25 கைதிகள் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு

மதுரை மத்திய சிறையில் விதிமீறி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, 25 கைதிகள் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி
மதுரை மத்திய சிறையில் விதிமீறி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, 25 கைதிகள் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் துன்புறுத்துவதாகக் கூறி மதுரை சிறை கைதிகள் 50க்கும் மேற்பட்டோர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் சிலர் கற்களை எறிந்து தாக்குதல் நடத்தியதோடு, மதில் சுவர் மீது ஏறி, தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, காவல் இணைஆணையர் சசிமோகன் தலைமையில் போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர். பின்னர் மதுரை மேற்கு வட்டாச்சியர் கோபிதாஸ், சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி, கண்காணிப்பாளர் ஊர்மிளா ஆகியோர் இணைந்து, நடத்தி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, கைதிகள் போராட்டத்தை கைவிட்டனர். இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட 25 கைதிகள் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறை விதிமுறை மீறி அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு போடப்பட்டுள்ளது. மத்திய சிறை புற காவல் நிலையத்தின் காவலர் பாலசுப்பிரமணியன் அளித்த புகாரை தொடர்ந்து, கரிமேடு போலீசார், இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை