தமிழ்நாடு

பிரதமர் மோடி வருகை.. திருச்சி விமான நிலையத்தை சுற்றிவளைத்த போலீஸ் பாதுகாப்பு

தந்தி டிவி

பிரதமர் வருகையை ஒட்டி திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார். தமிழகம் வரும் அவர், 26ஆம் தேதி மாலை தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை திறந்து வைக்க உள்ளார். இதனை தொடர்ந்து 27-ம் தேதி திருச்சி விமான நிலையம் சென்று, ஹெலிகாப்டர் மூலம் கங்கை ​​கொண்ட சோழபுரத்தில் ஆடித்திருவாதிரை விழாவில் பங்கேற்று பேசுகிறார். இதையடுத்து தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

இதன் காரணமாக திருச்சி பழைய விமான நிலையத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்புடன் 6 மோப்ப நாய்கள் மூலம் வெடிகுண்டு சோதனையும் மேற்கொள்ளப்படுகிறது.

இந்தப் பாதுகாப்பு வரும் 28 ம் தேதி வரை அமலில் இருக்கும் என கூறப்படுகிறது.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு