திருப்புவனம் அஜித் குமார் கொலை வழக்கு - அச்சுறுத்தல் இருப்பதாக வழக்கறிஞர் புகார்
சிவகங்கை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டும், காவல்துறை தனக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று அஜித் குமார் கொலை வழக்கு வழக்கறிஞர் கார்த்திக் ராஜாவு புகார் தெரிவித்தார். திருப்புவணம் காவல் நிலையத்தில் காவல்துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்ட அஜித் குமார் வழக்கில், முக்கிய சாட்சிகளுக்கும், வழக்கறிஞருக்கும் தொடர்ந்து அச்சுறுத்தல்கள் இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து அஜித் தரப்பு வழக்கறிஞர் கார்த்திக் ராஜாவுக்கு பாதுகாப்பு வழங்க, சிவகங்கை மாவட்ட நீதிமன்றம் கடந்த 12ம் தேதி உத்தரவிட்டது.
எனினும் இதுவரை காவல்துறை எந்தவிதமான பாதுகாப்பு வழங்கவில்லை என்றும், வழக்கை நடத்தக்கூடாது என்கிற கோணத்தில் அச்சுறுத்தல் இருப்பதாகவும் கார்த்திக் ராஜா குற்றம் சாட்டினார்.