தமிழ்நாடு

விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்... கூலி உயர்வு கோரி போராட்டம்

விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்... கூலி உயர்வு கோரி போராட்டம்

தந்தி டிவி

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு கோரி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், ஒரு கோடி ரூபாய் அளவிற்கு ஆடை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு கோரி காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சங்கரன்கோவில் பகுதியில் உள்ள விசைத்தறி கூடங்கள் அனைத்தும் செயல்படவில்லை. மேலும், தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக ஒரு கோடி ரூபாய் அளவிற்கு ஆடை உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்