தமிழ்நாடு

விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்... கூலி உயர்வு கோரி போராட்டம்

விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்... கூலி உயர்வு கோரி போராட்டம்

தந்தி டிவி

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு கோரி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், ஒரு கோடி ரூபாய் அளவிற்கு ஆடை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு கோரி காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சங்கரன்கோவில் பகுதியில் உள்ள விசைத்தறி கூடங்கள் அனைத்தும் செயல்படவில்லை. மேலும், தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக ஒரு கோடி ரூபாய் அளவிற்கு ஆடை உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை