தமிழ்நாடு

விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்... கூலி உயர்வு கோரி போராட்டம்

விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்... கூலி உயர்வு கோரி போராட்டம்

தந்தி டிவி

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு கோரி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், ஒரு கோடி ரூபாய் அளவிற்கு ஆடை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு கோரி காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சங்கரன்கோவில் பகுதியில் உள்ள விசைத்தறி கூடங்கள் அனைத்தும் செயல்படவில்லை. மேலும், தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக ஒரு கோடி ரூபாய் அளவிற்கு ஆடை உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்