மின்தடை காரணமாக ஆவடியில் மக்கள் சாலை மறியல் சென்னையை அடுத்த ஆவடியில் இரவு நேரத்தில் மின்தடை ஏற்பட்டதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இன்று அதிகாலை 3 மணிக்கு ஆவடி வீட்டு வசதிவாரிய அலுவலகத்தில் மின்தடை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து காலை 6 மணி வரை மின்சாரம் வராததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பூந்தமல்லி-ஆவடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், மின் தடை குறித்து மின்வாரிய அதிகாரிகள் அலட்சியமாக பதில் அளித்ததாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். பொதுமக்களுடன் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.