தமிழ்நாடு

குழந்தைகள் ஆபாச படம் - சென்னை தொழில் அதிபர் கைது

சென்னையில் குழந்தைகள் ஆபாச படம் அனுப்பியது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்

தந்தி டிவி

சென்னையில் குழந்தைகள் ஆபாச படம் அனுப்பியது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையை சேர்ந்தவர் சுமித் குமார் கல்ரா. இவர் குழந்தைகள்ஆபாச பட இணைப்பை மற்றொருவருக்கு அனுப்பியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய அவரை, விமான நிலையத்தில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவரை வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அழைத்து வந்து விசாரணை செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை