தமிழ்நாடு

தஞ்சாவூர் பெரிய கோயில் அருகே சுவரில் வரையப்பட்டுள்ள 'பொன்னியின் செல்வன்' நாவல் ஓவியங்கள்

தஞ்சாவூர் பெரிய கோயில் அருகே சுவரில் வரையப்பட்டுள்ள வண்ணமயமான 'பொன்னியின் செல்வன்' நாவல் ஓவியங்கள், சுற்றுலா பயணிகளின் கவனத்தை பெற்றுள்ளது.

தந்தி டிவி

23 ஆண்டுகளுக்கு பிறகு, தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு விழா நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி, தஞ்சை நகர் முழுவதும் உள்ள சுவர்கள் வண்ண ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கூடுதல் சிறப்பாக, கும்பகோணம் அரசு கவின் கலைகல்லூரி மாணவர்கள், பெரிய கோயில் அருகே உள்ள நீண்ட சுவரில், பொன்னியின் செல்வன் நாவல் ஓவியங்கள் வரைந்துள்ளனர். வரலாற்றுச் சம்பவத்தை நேரில் பார்ப்பதுபோன்று அந்த ஓவியங்கள் மிகவும் தத்ரூபமாக காட்சி அளிக்கிறது. அழகான அந்த ஓவியங்களை பார்த்த மக்கள், ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

'பொன்னியின் செல்வன்' நாவல் ஓவியங்கள்

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்