தமிழ்நாடு

பொன்னேரி அருகே நான்குவழி சாலைக்காக வீடுகளை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு

பொன்னேரி அருகே நான்குவழி சாலைக்காக வீடுகளை இடிக்க அளவீடு செய்வதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தந்தி டிவி
பொன்னேரி அருகே நான்குவழி சாலைக்காக வீடுகளை இடிக்க அளவீடு செய்வதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திருவள்ளூர் புதுவயலில் இருந்து பழவேற்காடு வரை சுமார் 22 கிலோமீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பொன்னேரியை அடுத்த சின்னக்காவனம், பெரிய காவனம் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் இந்த சாலை பணிக்காக அகற்றப்பட உள்ளதாக தெரிகிறது. இதற்காக நெடுஞ்சாலை துறையினர் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள், 50 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் தங்களது வீடுகளை இடிக்க கூடாது என அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்