திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே பூதூர் ஏரிக்கரையில் மர்மபை ஒன்று கேட்பாரற்று கிடந்தது. அதில் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஜெயலட்சுமி என்பவரின் பிரச்சார துண்டறிக்கையுடன் மாவில் செய்யப்பட்ட
பொம்மை ஒன்று இருந்தது. இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்
மாந்திரீகம் அல்லது சூனியம் ஏதேனும் செய்து மர்ம பை வீசப்பட்டதா என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.