தமிழ்நாடு

இந்த நம்பருக்கு உடனே கால் பண்ணுங்க..!

தந்தி டிவி

பொங்கல் பண்டிகைக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதால் புகார் அளிக்குமாறு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்ல இதுவரை ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் ஆம்னி பேருந்தில் முன்பதிவு செய்துள்ளனர். இந்த சூழலில், ஆம்னி பேருந்தில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ள நிலையில், புகாருக்குள்ளான நிறுவனங்களிடம் டிக்கெட் விலையை குறைக்க அறிவுறுத்தியுள்ளதாக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. டிக்கெட் விவரத்தை சங்க இணையதளத்தில் வெளியிட்டுள்ளதாகவும், கூடுதல் கட்டணம் வசூலித்தால், 90433 79664 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம்னி சங்க இணையதளத்தில், சென்னையில் இருந்து திருச்சிக்கு 1320 முதல் 1900 ரூபாய் வரையும், மதுரைக்கு 1690 ரூபாய் முதல் 2550 ரூபாய் வரையும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு