சேலத்தில் பொங்கல் பொருள் மற்றும் பரிசு தொகையை பெற 5 மணி நேரத்துக்கும் மேல் பொது மக்கள் காக்க வைக்கப்பட்டதால் வேதனை அடைந்தனர். ராக்கிபட்டி பகுதியில் ஆளுங்கட்சி பிரமுகர் வருகைக்காக பொருட்கள் வழங்கப்படாமல் பொதுமக்கள் காத்திருந்தனர். பொங்கல் பரிசுப் பொருட்களை பெற, காலை 7 மணி முதலே சுட்டெரிக்கும் வெயிலில், கைக் குழந்தைகளுடன் பொது மக்கள் காத்திருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் விற்பனையாளர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.