தமிழ்நாடு

பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரருக்கு ரூ.1,000 : முதலமைச்சருக்கு அமைச்சர்கள் நன்றி

பொங்கல் பண்டிகையை கொண்டாட 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு அமைச்சர்கள் நன்றி தெரிவித்து உள்ளனர்.

தந்தி டிவி
பொங்கல் பண்டிகையை கொண்டாட 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு அமைச்சர்கள் நன்றி தெரிவித்து உள்ளனர். சட்டப்பேரவையில் இன்று சட்டமன்ற உறுப்பினர்களின் வினாக்களுக்கு அமைச்சர்கள் பதிலளிக்கையில், பொங்கல் பண்டிகையை கொண்டாட, அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்தனர். பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசும் போது , அரசின் இந்த அறிவிப்பு சரித்திர சாதனை என கூறினார். இதே போல் அமைச்சர் தங்கமணி பேசும் போது, ஒரு சாமானியனின் ஆட்சி நடைப்பெற்று கொண்டிருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக, இந்த அறிவிப்பு உள்ளதாகவும், அதற்கு முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்