தமிழ்நாடு

நாட்டு வெடிகுண்டுகளுடன் பதுங்கி இருந்தவர்கள் கைது

புதுச்சேரி அருகே இளைஞர் ஒருவரை கொலை செய்வதற்காக நாட்டு வெடிகுண்டுகளுடன் பதுங்கி இருந்த 8 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

தந்தி டிவி
புதுச்சேரி அருகே, இளைஞர் ஒருவரை கொலை செய்வதற்காக நாட்டு வெடிகுண்டுகளுடன் பதுங்கி இருந்த 8 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.புதுச்சேரி, பாகூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும், சேரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு முன் விரேதம் இருந்து வந்தது. இந்த நிலையில் ராஜேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த இளைஞரை கொலை செய்யும் நோக்கத்தில், நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், முள்ளோடை பகுதியில் பதுங்கி இருந்த ராஜேஷ் மற்றும் அவனது நண்பர்கள் உட்பட 8 பேரை போலீசார் மடக்கி பிடித்ததுடன், 4 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி