தமிழ்நாடு

நாட்டு வெடிகுண்டுகளுடன் பதுங்கி இருந்தவர்கள் கைது

புதுச்சேரி அருகே இளைஞர் ஒருவரை கொலை செய்வதற்காக நாட்டு வெடிகுண்டுகளுடன் பதுங்கி இருந்த 8 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

தந்தி டிவி
புதுச்சேரி அருகே, இளைஞர் ஒருவரை கொலை செய்வதற்காக நாட்டு வெடிகுண்டுகளுடன் பதுங்கி இருந்த 8 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.புதுச்சேரி, பாகூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும், சேரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு முன் விரேதம் இருந்து வந்தது. இந்த நிலையில் ராஜேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த இளைஞரை கொலை செய்யும் நோக்கத்தில், நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், முள்ளோடை பகுதியில் பதுங்கி இருந்த ராஜேஷ் மற்றும் அவனது நண்பர்கள் உட்பட 8 பேரை போலீசார் மடக்கி பிடித்ததுடன், 4 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?