தமிழ்நாடு

நியூட்ரினோ திட்டத்திற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளிக்க கூடாது - வைகோ

நியூட்ரினோ திட்டத்திற்கு, தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளிக்கக்கூடாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.

தந்தி டிவி
நியூட்ரினோ திட்டத்திற்கு, தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளிக்கக்கூடாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். நியூட்ரினோ திட்டத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் இடைக்கால தடை விதித்ததற்கு, வரவேற்பு தெரிவித்த அவர், இதனால், நிம்மதியும், நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். ஏனெனில் இந்த திட்டம் ஒருவேளை வந்தால், முல்லைப்பெரியாறு அணையும், இடுக்கி அணையும் இடிந்து நொறுங்கும் அபாயம் உள்ளதாக வைகோ எச்சரித்துள்ளார். தென் தமிழகத்தில், 5 மாவட்டங்களில், விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்காத நிலை உருவாகும் என்றும் பொதுமக்களுக்கும் குடிக்க தண்ணீர் கிடைக்காது என்றும் தமது அறிக்கையில், வைகோ அச்சம் தெரிவித்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்