தமிழ்நாடு

நியூட்ரினோ திட்டத்திற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளிக்க கூடாது - வைகோ

நியூட்ரினோ திட்டத்திற்கு, தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளிக்கக்கூடாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.

தந்தி டிவி
நியூட்ரினோ திட்டத்திற்கு, தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளிக்கக்கூடாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். நியூட்ரினோ திட்டத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் இடைக்கால தடை விதித்ததற்கு, வரவேற்பு தெரிவித்த அவர், இதனால், நிம்மதியும், நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். ஏனெனில் இந்த திட்டம் ஒருவேளை வந்தால், முல்லைப்பெரியாறு அணையும், இடுக்கி அணையும் இடிந்து நொறுங்கும் அபாயம் உள்ளதாக வைகோ எச்சரித்துள்ளார். தென் தமிழகத்தில், 5 மாவட்டங்களில், விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்காத நிலை உருவாகும் என்றும் பொதுமக்களுக்கும் குடிக்க தண்ணீர் கிடைக்காது என்றும் தமது அறிக்கையில், வைகோ அச்சம் தெரிவித்துள்ளார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"