தமிழ்நாடு

பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை : திருநாவுக்கரசுவிடம் சிபிசிஐடி விசாரணை நிறைவு

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு, சிபிசிஐடி காவல் முடிந்து, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தந்தி டிவி
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை சிபிசிஐடி போலீசார் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். கடந்த வெள்ளிக்கிழமை அவரை காவலில் எடுத்த போலீஸார், ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வந்த நிலையில் இன்று காலை நீதிபதி நாகராஜ் முன்பு அவரை ஆஜர்படுத்தி, மீண்டும் சிறையில் அடைத்தனர். இன்று மாலை வரை அவகாசம் உள்ள நிலையில் முன்கூட்டியே அவரை போலீஸார் ஆஜர்படுத்தினர். அடுத்தகட்டமாக, சிறையில் உள்ள சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களின் வீட்டில் சேகரிக்கப்பட்ட செல்போன்கள், சிம்கார்டுகளில் உள்ள பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை