பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து தஞ்சை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை அனைவரையும் உடனடியாக கைது செய்து வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தினர். புதுக்கோட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டு, காவல்துறையால் தாக்கப்பட்டவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கை ரத்து செய்து, அவரை தாக்கிய காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் மாணவர்கள் முன்வைத்தனர்.