தமிழ்நாடு

ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம்: மத்திய அரசுக்கு 38 அமைப்புகள் கண்டனம்

ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டபிரிவு 370ஐ ரத்து செய்த மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தந்தி டிவி

ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டபிரிவு 370ஐ ரத்து செய்த மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தமுமுக, எஸ்டிபிஐ, தமிழக கொங்கு இளைஞர் பேரவை, மே 17 இயக்கம், முக்குலத்தோர் புலிப் படை, தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, திராவிடர் விடுதலை கழகம் உள்ளிட்ட 30 அமைப்புகள் சார்பில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி செல்ல முயன்றனர். அப்போது, அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கூறி, அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதனிடையே, செய்தியாளர்களை சந்தித்த, திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், காஷ்மீர் விவகாரத்தில் ஒரு கருத்து கேட்பும் நடத்தப்படவில்லை என்றும், காங்கிரஸ், பா.ஜ.க இருவரும் செய்த துரோகம் என்றும் குற்றம் சாட்டினார். மேலும், இந்தியாவில் எல்லா மாநிலங்களையும் யூனியன் பிரதேசங்களாக மாற்றும் உக்தி இது என்றும் அவர், விமர்சித்தார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு