* இந்த விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக நோட்டீஸ் ஒன்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் மீது வழக்கு பதிவு செய்ய தயக்கம் காட்டுவது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து விரிவான விசாரணை நடத்தி, 4-வாரத்துக்குள் அறிக்கை தர மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.