தமிழ்நாடு

"தற்கொலைக்கு தூண்டிய போலீசார்" - பெண் வெளியிட்ட வீடியோ

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாறு பகுதியைச் சேர்ந்த ஆஷா புஷ்ரா நாகர்கோவில் பகுதியில் உள்ள எரிவாயு நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். நிறுவனத்தின் உரிமையாளருடன் ஆஷா நெருங்கி பழகி வந்த நிலையில் , அந்த நபரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஆஷா நெருக்கடி கொடுத்ததால் பணியிலிருந்து அவர் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் வாடகை வீட்டிலிருந்து உரிமையாளர் வெளியேற்றியதால் தாம் நிர்கதியாக்கப்பட்டதாகவும் ஆஷா தற்கொலைக்கு முன்பு வீடியோ வெளியிட்டுள்ளார். இந்நிலையில், வடசேரி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்த போது போலீசார் அவரை தற்கொலைக்கு தூண்டும் விதத்தில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஆஷா, பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆஷாவின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து தெரிவித்துள்ளனர்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை