தமிழ்நாடு

"தற்கொலைக்கு தூண்டிய போலீசார்" - பெண் வெளியிட்ட வீடியோ

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாறு பகுதியைச் சேர்ந்த ஆஷா புஷ்ரா நாகர்கோவில் பகுதியில் உள்ள எரிவாயு நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். நிறுவனத்தின் உரிமையாளருடன் ஆஷா நெருங்கி பழகி வந்த நிலையில் , அந்த நபரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஆஷா நெருக்கடி கொடுத்ததால் பணியிலிருந்து அவர் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் வாடகை வீட்டிலிருந்து உரிமையாளர் வெளியேற்றியதால் தாம் நிர்கதியாக்கப்பட்டதாகவும் ஆஷா தற்கொலைக்கு முன்பு வீடியோ வெளியிட்டுள்ளார். இந்நிலையில், வடசேரி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்த போது போலீசார் அவரை தற்கொலைக்கு தூண்டும் விதத்தில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஆஷா, பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆஷாவின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து தெரிவித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை