தமிழ்நாடு

கடற்கரையில் குப்பை போட்ட இளைஞர்களை வரவழைத்து சுத்தம் செய்ய வைத்த காவலர்

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பிறந்த நாள் கொண்டாடி, அசுத்தம் செய்த இளைஞர்களை வரவழைத்து சுத்தம் செய்ய வைத்த காவலருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

தந்தி டிவி
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பிறந்த நாள் கொண்டாடி, அசுத்தம் செய்த இளைஞர்களை வரவழைத்து சுத்தம் செய்ய வைத்த காவலருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரியும் எபென் கிறிஸ்டோபர், பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை பகுதியில் பணியில் இருந்த போது, போலீஸ் பூத் அருகே நடைபாதையில் கேக் வைக்கும் அட்டை பெட்டிகள், கலர் காகிதங்கள் கிடந்தன. இதையடுத்து, அங்கு பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வரவழைத்த காவலர், அவர்களிடம் துடைப்பத்தை கொடுத்து, சுத்தம் செய்ய வைத்தார். பொது இடங்களையும் நமது சொந்த வீடாக கருதி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என அந்த இளைஞர்களுக்கு அவர் அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். காவலரின் இந்தச் செயலை உயரதிகாரிகள் பாராட்டினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை