தமிழ்நாடு

"திருவண்ணாமலை கோயிலில் மாயமான சிலை, சூலம்" - தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை

திருவண்ணாமலை கோயிலில் மாயமான சிலையை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வெண்கலம், பஞ்சலோகம் உள்ளிட்டவற்றால் செய்யப்பட்ட 164 சிலைகள் உள்ளன. கடந்த 1982 ஆம் ஆண்டு கடைசியாக கணக்கெடுப்பு நடைபெற்றதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஆரணி பகுதியை சேர்ந்த ஒரு பக்தர் கடந்த 1959ம் ஆண்டு கோயிலுக்கு காணிக்கையாக அளித்த ஒன்றே முக்கால் அடி உயரமுள்ள தண்டாயுதபாணி சாமி சிலை மற்றும் முக்கால்

அடி உயர சூலம் உள்ளிட்டவற்றை காணவில்லை என புகார் எழுந்தது.

இது குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் விரைவில் அந்த சிலைகள் குறித்து தெரிய வரும் என்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பொன்னி தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை