தமிழ்நாடு

"திருவண்ணாமலை கோயிலில் மாயமான சிலை, சூலம்" - தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை

திருவண்ணாமலை கோயிலில் மாயமான சிலையை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வெண்கலம், பஞ்சலோகம் உள்ளிட்டவற்றால் செய்யப்பட்ட 164 சிலைகள் உள்ளன. கடந்த 1982 ஆம் ஆண்டு கடைசியாக கணக்கெடுப்பு நடைபெற்றதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஆரணி பகுதியை சேர்ந்த ஒரு பக்தர் கடந்த 1959ம் ஆண்டு கோயிலுக்கு காணிக்கையாக அளித்த ஒன்றே முக்கால் அடி உயரமுள்ள தண்டாயுதபாணி சாமி சிலை மற்றும் முக்கால்

அடி உயர சூலம் உள்ளிட்டவற்றை காணவில்லை என புகார் எழுந்தது.

இது குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் விரைவில் அந்த சிலைகள் குறித்து தெரிய வரும் என்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பொன்னி தெரிவித்துள்ளார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி