காவலர் தேர்வு சர்ச்சை - அனைவருக்கும் மதிப்பெண் வழங்க உத்தரவு காவலர் மற்றும் சிறை காவலர் தேர்வில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய கேள்விகளுக்கு, மதிப்பெண் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக இருந்த 3,644 காவலர், சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கு தேர்வு நடந்தது. இதில், சில கேள்விகளுக்கான பதில்கள் தவறாக இருந்ததாக கூறி, விழுப்புரத்தைச் சேர்ந்த சதீஷ் மற்றும் தமிழரசன் ஆகியோர் தொடர்ந்த வழக்கை, நீதிபதி எம்.தண்டபாணி விசாரித்தார். அப்போது, சர்ச்சைக்குரிய 3 கேள்விகளுக்கு அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் முழு மதிப்பெண் வழங்கி புதிய தேர்வு பட்டியலை வெளியிட்டு, அதன் அடிப்படையில் நியமன நடவடிக்கைகளை தொடங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.