தமிழ்நாடு

சந்தன மரங்களை வெட்டும் மர்ம கும்பலை சினிமா பாணியில் துரத்திய போலீஸ்...

காட்டிற்குள் ஓடி மறைந்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

தந்தி டிவி
கோவை சாய்பாபா காலனியில் சந்தன மரங்களை வெட்டிய கும்பலை போலீசார் சினிமா பாணியில் விரட்டி சென்றனர். முருகன் மில்ஸ் பின் பகுதியில் உள்ள சந்தன மரங்களை மர்ம நபர்கள் சிலர் வெட்டிக்கொண்டிருந்தனர். தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்ற போது, மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிசென்றது. இதனையடுத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த கார் நிற்காமல் சென்றது. அந்த காரை ஜீப்பில் போலீசார் துரத்தி சென்ற நிலையில், தில்லை நகர் பகுதியில் நின்றிருந்த ஜீப் ஒன்றின் மீது கார் மோதி நின்றது. இதனையடுத்து காரில் இருந்த டிரைவர் உள்ளிட்ட 4 பேர் காட்டிற்குள் ஓடி மறைந்தனர். தப்பியோடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"