தமிழ்நாடு

புல்லட் நாகராஜன் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு - வேலூர் மத்திய சிறையில் அடைப்பு

போலீசாரை மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ள ரவுடி புல்லட் நாகராஜன், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்.

தந்தி டிவி

தேனி பெரியகுளத்தை அடுத்த மேல்மங்கலத்தைச் சேர்ந்த புல்லட் நாகராஜன் என்ற ரவுடி, காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு, வாட்ஸ்-அப் ஆடியோ மூலம் கொலை மிரட்டல் விடுத்திருந்தான். முடிந்தால் தன்னை கைது செய்து பாருங்கள் என போலீசாருக்கு சவாலும் விடுத்திருந்தான். இந்தநிலையில், நேற்று பெரியகுளம் தென்கரை பகுதியில் ரோந்து பணியில் இருந்த போலீசார், புல்லட் நாகராஜனை அதிரடியாக கைது செய்தனர். அவனிடம் இருந்து கத்தி, 2 போலித்துப்பாக்கிகள், குழந்தைகள் விளையாட பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. பின்னர், மேல்மங்கலத்தில் உள்ள அவனது வீட்டிற்கு அழைத்துச் சென்ற போலீசார் அங்கும் தீவிர சோதனை நடத்தினர். பின்னர், புல்லட் நாகராஜன் மீது ஒன்பது பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பெரியகுளம் நடுவர் நீதிமன்ற நீதிபதி அருண்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டான். அவர், புல்லட் நாகராஜனை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து, அவன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்