தமிழ்நாடு

குடிபோதையில் பேருந்து கண்ணாடி உடைப்பு : 2 இளைஞர்களை கைது செய்த போலீஸ்

சென்னை காசிமேட்டில் அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி

சென்னை காசிமேட்டில் அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தண்டையார் பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பிராட்வே சென்று கொண்டிருந்த மாநகர பேருந்து மீது குடிபோதையில் இருந்த இரண்டு இளைஞர்கள் கல் வீசி தாக்கியுள்ளனர். இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்து சேதமடைந்தது மேலும் நடத்துனர் பெரியசாமியை தகாதவார்த்தைகளால் திட்டியுள்ளனர் இதனையடுத்து பேருந்து ஓட்டுனர் சரவணன் காசிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து காசிமேடு பகுதியை சேர்ந்த பிரசாந்த், குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு