தமிழ்நாடு

பெருங்குடி : விஷவாயு தாக்கி 3 பேர் பலி, 2 பேர் கவலைக்கிடம்

சென்னை பெருங்குடியை அடுத்த கல்லுக்குட்டையில் கிணறு தோண்டிய போது விஷவாயு தாக்கியதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தந்தி டிவி
கண்ணப்பன் என்பவர் வீட்டின் கிணற்றை தூர் வாரும் பணியில், அதே பகுதியை சேர்ந்த அன்பழகன், காளிதாஸ், ராஜு, சேகர் மற்றும் வீட்டின் உரிமையாளர் கண்ணப்பனின் மகன் சந்தோஷ் ஆகிய ஐந்து பேர் ஈடுபட்டனர். இதில் விஷ வாயு தாக்கியதில் சந்தோஷ், அன்பழகன் மற்றும் காளிதாஸ் ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜு, சேகர் ஆகிய இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து விசாரித்த போலீசார், வீட்டின் உரிமையாளர் கண்ணப்பனை கைது செய்தனர். மகன் சந்தோஷ் உயிரிழந்த நிலையில், தந்தை கண்ணப்பனை துரைப்பாக்கம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை